கால்நடைகளின் நலன் வேண்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை 500 ரேக்ளா வண்டிகளில் வந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் ஏழு நாட்களும் பழனி கிரி வீதியில் மூலிகை காற்று வீசுவதாகவும், இதை நுகர்வதால் நோய்கள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரி வலம் வந்து பழனியாண்டவரை தரிசனம் செய்தனர்.
இதில் கடைசி கிரிவல நாளான திங்கள்கிழமை பழனியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் மாட்டு வண்டி பூட்டி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கால்நடைகள் நோயின்றி வாழ்வதாகவும், விவசாயம் செழிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதையொட்டி திங்கள்கிழமை ஆண்டிபட்டி, பூளவாடி, பாலப்பம்பட்டி, கல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டி, ரேக்ளா வண்டி, குதிரை வண்டிகளில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான வண்டிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

