வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திண்டுக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குநர் எம்.விஜயகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதனை எளிமைப்படுத்த வேண்டும். அதேபோல், இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு இறப்பு சான்றிதழை கேட்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் இறப்புக்கான பதிவு இருக்கும் என்பதால், அதன் அடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை அலுவலர்களே நீக்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு, கல்லூரிகளுக்கு அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா விற்றவா் கைது

விஷம் அருந்தி பெண் தற்கொலை

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
