திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் பழனி புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, பழனியைச் சேர்ந்த கோபால்(62) என்பவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை மாலை பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு இரு கக்கர வாகனத்தில் வந்த கோபாலை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது 4 மூட்டைகளில் கோபால் கொண்டு வந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.50ஆயிரம் .
இதையடுத்து கோபால் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


