கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் இரவில் படிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.