கொடைக்கானலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் ஹில்டாப் நிறுவனம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 12 ஆம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் நடத்தின. ஜெய்திலகர் தலைமை வகித்தார். மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை நடத்தினர். மேலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, சீனிவாசபுரம், செண்பகனூர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுழற் சங்க நிர்வாகத்தினர் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
