பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் தைப்பூசம் முடிந்த பிறகு மாணவிகள் பங்கேற்கும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் பொங்கல்விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாணவிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் சூரியபகவானுக்கு பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாணவிகள் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பேரவை துணைத் தலைவர் தமிழ்செல்வி, அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!






