விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொடைக்கானலில் மீண்டும் மழை

கொடைக்கானலில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

News image
கொடைக்கானல்
Updated On :8 ஆகஸ்ட் 2020, 10:47 am

DIN

கொடைக்கானலில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்தது அதன்பின் மழை குறைந்து கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்து வந்தது. 

இதனால் கொடைக்கானல் மற்றும் பூம்பாறை, மன்னவனுர், குண்டாறு, கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்ததால் பல இடங்களில் 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டது.

மரங்களை அகற்றியும், மின்கம்பிகளை சரிசெய்யும் பணியிலும் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும்(நேற்று) மழை பெய்யாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் லேசான வெயில் நிலவியது.

அதன் பின் சுமார் இரண்டு மணி நேரம் விட்டு விட்டு மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அன்றாடப் பணிகளில் ஈடுபட முடியாமல் போவதால் பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.