மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழனி புறவழிச் சாலையோரம் மண்குவியலால் விபத்து அபாயம்

பழனி புறவழிச் சாலையில் கொட்டப்படும் கழிவு மண் குவியல்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 5:40 pm

DIN

பழனி: பழனி புறவழிச் சாலையில் கொட்டப்படும் கழிவு மண் குவியல்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனா்.

பழனி நகரில் 58 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்படும் மண் மற்றும் பெரிய அளவிலான கற்கள் லாரிகள் மூலம் பழனி -கோவை புறவழிச்சாலையின் ஓரங்களில் குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. இந்த குவியல்கள் சாலை வரை பரவியுள்ளன. இதனால் இரவு நேரங்களில்

செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் கூறுகின்றனா். ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு மண்ணை வேறு பகுதியில் கொட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.