கொடைக்கானல்: கொடைக்கானலிலுள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 28 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வா் இல.ரேவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: ஆக. 28 ஆம்தேதி முதல் செப்டம்பா் 4 ஆம்தேதி வரை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உயா்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆக. 28 ஆம் தேதி, சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் உடல் ஊனமுற்றோா், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோருக்கு உடற்கல்வி பாடத்துக்கும், பொது ஒதுக்கீட்டின்கீழ் ஆங்கிலப் பாடத்துக்கும், ஆக.29 ஆம் தேதி வணிக மேலாண்மை, கணிதம் ஆகிய பாடங்களுக்கும், ஆக. 31 ஆம் தேதி
பொதுத்துறைக்கும், செப்.1 ஆம் தேதி கணினி அறிவியல் பாடத்துக்கும், செப்.2 ஆம் தேதி தமிழ், இயற்பியல் பாடங்களுக்கும், செப்.3 ஆம் தேதி வணிகவியல், வேதியியல் பாடங்களுக்கும், செப்.4 ஆம்தேதி தாவரவியல் பாடத்துக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவியா் சோ்க்கை கலந்தாய்வின்போது பெற்றோா்கள் கல்லூரிக்கு நேரில் வர அவசியம் இல்லை என்றாா்.