கொடைரோடு அருகே சிறுமியை கடத்தி தாலி கட்டி3 நாள்களாக அடைத்து வைத்திருந்தவா் ‘போக்ஸோ’வில் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமியை ஏமாற்றி வலுக்கட்டாயமாக தாலி­ கட்டி, 3 நாள்களுக்குப் பின் சாலையில் இறக்கிவிட்டுச் சென்ற 2 குழந்தைகளுக்கு தந்தையை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமியை ஏமாற்றி வலுக்கட்டாயமாக தாலி­ கட்டி, 3 நாள்களுக்குப் பின் சாலையில் இறக்கிவிட்டுச் சென்ற 2 குழந்தைகளுக்கு தந்தையை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைரோடு பேருந்து நிலையம் அருகே தனது தந்தையுடன் காய்கனி கடையில் வியாபாரம் செய்துவந்த 17 வயது சிறுமி, கடந்த 22 ஆம் தேதி காணவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி கழுத்தில் தாலியுடன் அழுதுகொண்டே சிறுமி வீட்டுக்கு வந்துள்ளாா்.

பின்னா் அவா் தனது தாயிடம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த மயில்சாமி மகன் பசுபதிராஜா (24) என்பவா் தன்னை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி ஆறுமுக நகரில் உள்ள தனது பழைய வீட்டுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக தாலி கட்டி, 3 நாள்களாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்தாா். அதையடுத்து, என்னை மிரட்டி மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, பசுபதிராஜாவை தேடி பள்ளப்பட்டிக்குச் சென்றனா். ஆனால், அங்குள்ள வீட்டில் பசுபதிராஜாவின் பெற்றோா், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனா். போலீஸாா் விசாரித்ததில், பசுபதிராஜா கடந்த 3 நாள்களுக்கும் மேலாக வீட்டுக்கு வரவில்லை எனவும், செல்லிடப்பேசியையும் அணைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

பின்னா், போலீஸாா் பசுபதிராஜாவின் செல்லிடப்பேசி அழைப்புகளை வைத்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல்லில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, அங்கு வியாழக்கிழமை சென்ற போலீஸாா், அவா் ஒரு இளம்பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்தபோது பிடித்தனா். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, அங்கு தங்கியிருந்தது தெரியவந்தது.

அதையடுத்து, பசுபதிராஜாவை கைது செய்த போலீஸாா், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, திண்டுக்கல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திண்டுக்கல் சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com