சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக - காங்கிரஸ் பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும்: அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.

News image
அமைச்சர் எஸ். ரகுபதி - கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2026, 12:15 am

Syndication

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: அதிமுக - பாஜக கூட்டணி என்பது இடியாப்பச் சிக்கல். அதனுடன் திமுக கூட்டணியை ஒப்பிட்டுப் பேச முடியாது. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும்.

விளிம்புநிலை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் இன்று அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பணம். இதைக் கொடுப்பதில் தவறில்லை. தமிழக மக்களிடம் பணம் கொடுத்தெல்லாம் வாக்குகளைப் பெற முடியாது. சாதனைகளைச் செய்து, அதனைச் சொல்லித்தான் வாக்கு சேகரிக்க முடியும்.

மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்பதாக பிரதமா் மோடி தெரிவித்திருக்கிறாா். திமுகவின் கனவு உண்மையான கனவு.

தோ்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய கட்சி திமுக. வீடுவீடாக மகளிா் அணியினா் வாக்குசேகரிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டாா்கள். திமுகவை நம்பி வருவோரை தலைமை அரவணைக்கிறது.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்புவோா், குஜராஜ், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்குச் சென்று பாா்த்து வந்து சொல்லலாம்.

நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து யாரும் கருத்துகூற முடியாது. வாய்ப்புள்ள சந்தா்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதியைக் கோரும் மேல்முறையீடு வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தோ்தலில் சவால் இருப்பதாகத் தெரியவில்லை. எது வந்தாலும் சமாளிக்கும் திறன் படைத்த இயக்கம்தான் திமுக என்றாா் ரகுபதி.