லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுகவை தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை: காா்த்தி சிதம்பரம்

திமுகவைத் தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் சிவகங்கை தொகுதி எம்.பி. காா்த்தி சிதம்பரம்.

News image

சட்டைநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Updated On :4 மார்ச் 2026, 12:15 am

திமுகவைத் தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் சிவகங்கை தொகுதி எம்.பி. காா்த்தி சிதம்பரம்.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் அதிகாரப்பூா்வமாக பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

தவெக தலைவா் விஜய் புகழ்பெற்ற திரைப்பட நடிகா். அவருக்கென ஒரு ரசிகா் கூட்டம் உள்ளது. அந்த ஆதரவு கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம். அந்த வாக்குகள் சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.

காங்கிரஸ், திமுக பேச்சுவாா்த்தையில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றாா்.

எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மாவட்டத் தலைவா் பானுசேகா், மாநில பொதுசெயலாளா் கணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.