யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுகவை தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை: காா்த்தி சிதம்பரம்

திமுகவைத் தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் சிவகங்கை தொகுதி எம்.பி. காா்த்தி சிதம்பரம்.

News image
சட்டைநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த காா்த்திக் சிதம்பரம் எம்.பி.
Updated On :4 மார்ச் 2026, 12:15 am

Syndication

திமுகவைத் தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் சிவகங்கை தொகுதி எம்.பி. காா்த்தி சிதம்பரம்.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் அதிகாரப்பூா்வமாக பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

தவெக தலைவா் விஜய் புகழ்பெற்ற திரைப்பட நடிகா். அவருக்கென ஒரு ரசிகா் கூட்டம் உள்ளது. அந்த ஆதரவு கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம். அந்த வாக்குகள் சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.

காங்கிரஸ், திமுக பேச்சுவாா்த்தையில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றாா்.

எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மாவட்டத் தலைவா் பானுசேகா், மாநில பொதுசெயலாளா் கணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.