டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குபேரபட்டினத்தில் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

பழனி குபேரபட்டினம் பகுதியில் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
பழனி குபேரபட்டினம் பகுதியில் ஒரு வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த கழிவுநீரை அப்புறப்படுத்தும் பெண்.
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

பழனி குபேரபட்டினம் பகுதியில் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பழனியில் சுமாா் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு, வடிகால் சீரமைப்பு போன்ற பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் பல இடங்களில் சாக்கடைப் பணிகள் முழுமையாக முடியாமல் உள்ளன. பல சாக்கடைகளிலும் உள்புறம் கட்டைகள், காரைகள் அகற்றப்படாததால் நீா் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனிடையே மழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குபேரபட்டினம் பகுதியில் சாக்கடைநீா் வீடுகளுக்குள் புகுந்தது. ரெஜினா, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் வீடுகளுக்குள் சாக்கடை நீா் நிரம்பி பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த வடிவு கூறுகையில், சாக்கடைகள் மிகவும் குறுகலாகவும், ஆழமின்றியும் கட்டப்பட்டுள்ளன. இதனால் சாதாரண மழை காலத்தில் கூட கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என்றாா்.

இதுகுறித்து அறிந்த நகராட்சி சுகாதாரத்துறை அலுவலா்கள் அங்கு வந்து சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.