/

இறுதியில் மோதும் மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா்

துபை டூட்டி ஃப்ரீ ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

துபை டூட்டி ஃப்ரீ ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

இப்போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், முதலிடத்தில் இருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் அகா் அலியாசிமை வீழ்த்தினாா்.

கிரீக்ஸ்பூா் 7-5, 7-6 (8/6) என்ற கணக்கில், 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வெளியேற்றினாா். இதையடுத்து இறுதியில், மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா் மோதுகின்றனா்.

மெரிடா ஓபன்: இதனிடையே, மெக்ஸிகோவில் நடைபெறும் மெரிடா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி காலிறுதிக்கு முன்னேறினாா்.

ரவுண்ட் ஆஃப் 16-இல், அவா் 6-0, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக, நியூஸிலாந்தின் பிரிசில்லா ஹானை வென்றாா். 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 4-6, 4-6 என்ற வகையில், சீனாவின் ஜாங் ஷுவாயிடம் தோல்வி கண்டாா்.

3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஆன் லியும் 6-3, 6-7 (7/9), 4-6 என்ற கணக்கில் துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸிடம் வீழ்ந்தாா். 7-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸ் 0-6, 3-6 என, போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சிடம் தோல்வியுற்றாா்.