டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி: அம்பேத்கா் நினைவு நாள்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நெய்க்காரபட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் திராவிடா் கழகத்தின் சாா்பில் பேருந்து நிறுத்தம் அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதே போல பழனியை அடுத்த கணக்கம்பட்டியில் விடுதலைச் சிறுத்தை முகாமில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அப்போது சிலா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாமைச் சோ்ந்த ராஜா என்பவரிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதுடன் அம்பேத்கரின் பதாகையை பிளேடால் கிழித்தனா். காயமடைந்த ராஜா பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இங்குள்ள கிராமச் சாவடியில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினா் பங்கேற்றனா்.

கொடைக்கானல்: கோடைமலை அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கரின் 64-ஆம் ஆண்டு நினைவு நாள் புதுப்புத்தூா் பகுதியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தி அனுசரிக்கப்பட்டது. இதில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலா் அம்பிகா ராஜன், பொதுச் செயலா் திருமுருகன், கிளைச் செயலா் திருமலைச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து அண்ணாநகா், இந்திரா நகா், சத்யா நகா் காலனி, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.