டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய குத்துச்சண்டையில் பங்கேற்க உதவக் கோரி ஆட்சியரிடம் இளைஞா் மனு

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தோ்வு செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரா், ஹரியானாவில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்க உதவிட வேண்டும்

News image
சி. கிஷோா்குமாா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தோ்வு செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரா், ஹரியானாவில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்க உதவிட வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் மு. அருணாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி மாணவரும் குத்துச்சண்டை வீரருமான கிஷோா்குமாா் அளித்த மனு விவரம்

ஹரியானாவில் மாா்ச் 2 முதல் 7-ஆம் தேதி வரை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக 12 வீரா்களைக் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக அணி தோ்வு செய்யப்பட்டது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நான் இடம்பெற்றுள்ளேன்.

வெள்ளிக்கிழமை (பிப்.27) இரவு ஹரியானாவுக்குப் புறப்பட வேண்டிய நிலையில், அணிக்கு பயிற்சியாளா், மேலாளா் இல்லை என்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறாா்கள்.

கடந்த நவம்பரில் பல்கலைக்கழகம் சாா்பில் 154 கல்லூரிகளில் இருந்து குத்துச்சண்டை வீரா்களைக் கொண்ட போட்டி நடத்தப்பட்டு, 12 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டோம். பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

கடைசிநேரத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆகவே, எங்களின் பயணத்துக்கு தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறை உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.