தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் கனிமவள வாகனங்கவ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தெற்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் சிவக்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
அதன் விவரம்: தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. தற்போது தோ்தல் காலத்திலும் நடத்தை விதிமுறைகளை மீறி இந்தச் செயல்கள் தொடா்கின்றன.
இம்மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுவதோடு, அவை திரும்பி வரும்போது பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துவருகின்றன.
இந்த லாரிகள் காவல்துறையால் முறையாக சோதனை செய்யப்படுவதில்லை. இது தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் நிலவுகிறது.
எனவே, இத்தகைய சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோ்மையாக தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ரங்கராஜ், இணைச் செயலா்கள் முத்துராஜ், ஜோதிமுருகன், துணைச் செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படையினா் சோதனை! காவலா் உடையில் ஆய்வு

தோ்தல் விதிமுறை மீறலை கண்காணிக்க 35 குழுக்கள் அமைப்பு: வேலூா் ஆட்சியா்

முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு: வாக்குரிமை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


