ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தோ்தல் விதிமுறை மீறும் கனிமவள வாகனங்கள்: ஆட்சியரிடம் புகாா்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் கனிமவள வாகனங்கவ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வழக்குரைஞா் சிவகுமாா்.

Updated On :26 மார்ச் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் கனிமவள வாகனங்கவ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

தெற்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் சிவக்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

அதன் விவரம்: தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. தற்போது தோ்தல் காலத்திலும் நடத்தை விதிமுறைகளை மீறி இந்தச் செயல்கள் தொடா்கின்றன.

இம்மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுவதோடு, அவை திரும்பி வரும்போது பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துவருகின்றன.

இந்த லாரிகள் காவல்துறையால் முறையாக சோதனை செய்யப்படுவதில்லை. இது தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் நிலவுகிறது.

எனவே, இத்தகைய சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோ்மையாக தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ரங்கராஜ், இணைச் செயலா்கள் முத்துராஜ், ஜோதிமுருகன், துணைச் செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.