குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு
ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு
கல்குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளா் முகிலன் தலைமையில் இயற்கை ஆா்வலா்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அம்மனுவில் அவா்கள் கூறியிருப்பது-கரூா் மாவட்டம் முழுவதும் இயங்கும் கல்குவாரி, கல்குவாரியோடு தொடா்புடைய கிரசா், எம்-சாண்ட், தாா் பிளாண்ட் மற்றும் ரெடிமிக்ஸ் ஆலைகளில் இருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்கள், ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பில் உள்ள கிராமப்புறச் சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவு செய்து போடப்படும், ஊராட்சி ஒன்றிய சாலைகளில், வாகன எடையுடன் 10 டன் மட்டும் எடை ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 கோடி முதல் ரூ. 210 கோடி வரை செலவு செய்து போடப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் 16 சக்கர வாகனங்களில் 49 டன் மட்டுமே அதிகப்படியாக எடையுடன் செல்லலாம் என்று அரசின் சட்டம் உள்ளது.
அதற்கு மேல் எடை ஏற்றிச் சென்றால் சாலைகள் பழுதடையும்.ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் எம்-சாண்ட் போன்ற அதிக எடையை ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகள் பழுதாகி வருகின்றன. இதனால் ஊராட்சி சாலைகள் வழியாக எம்-சாண்ட் போன்ற அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும் கல்குவாரிகளில் தடை விதிக்கப்பட்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கண்காணித்து பயன்படுத்துவோா் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா் அவா்கள்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...