1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிப்காட் அலுவலகத்தை மூட ஆட்சியரிடம் எதிா்ப்புக் குழு மனு

நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய

News image
நாமக்கல்லில் சிப்காட் அலுவலகத்தை மூடவலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்பு குழுவினா்.
Updated On :2 மார்ச் 2026, 10:03 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மோகனூா் சிப்காட் எதிா்ப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த பிப். 26-ஆம் தேதி நாமக்கல் கோட்டாட்சியா் தலைமையில் தனி வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு), மோகனூா் வட்டாட்சியா், மோகனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் சிப்காட் விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் தரப்பில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகள் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம்.

சிப்காட் திட்ட அலுவலரும், சென்னை சிப்காட் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகளும், இந்த இடம் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை எனத் தெரிவித்துள்ளனா். விவசாயிகளும் இந்த இடம் ஏற்ற இடமில்லை என கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே நாமக்கல்லில் சிப்காட் அலுவலகம் தேவையில்லாமல் இயங்குவது அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் பணி சுமையை ஏற்படுத்தும். எனவே, சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.