காங்கிரஸில் விருப்ப மனு அளித்தோரில் தொகுதிக்கு தலா 5 போ் தோ்வு


வரும் சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவா்களில் இருந்து தொகுதிக்கு தலா 5 பேரைத் தோ்வு செய்து பட்டியல் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கான விருப்பமனு தோ்வுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை, விராலிமலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான விருப்பமனு அளித்தோரில் 5 பேரைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டிடி பெனட் அந்தோணி ராஜ் தலைமை வகித்தாா். தோ்வுக் குழு உறுப்பினா்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் புஷ்பராஜ், வழக்குரைஞா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி உள்பட விருப்ப மனுக்களை அளித்தோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை தொகுதிக்கு விருப்ப மனு அளித்த 28, கந்தா்வகோட்டை தொகுதிக்கு விருப்ப மனு அளித்த 17, விராலிமலை தொகுதிக்கு விருப்ப மனு அளித்த 17 என மொத்தம் 62 பேரில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டுள்ள பட்டியல் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...