வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்

News image
கோபியில் காங்கிரஸ் ஆய்வுக்குழுத் தலைவா் உதயகுமரன் தலைமையில் நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.
Updated On :13 மார்ச் 2026, 12:38 am

Syndication

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் தொகுதிகளில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

கோபி காங்கிரஸ் வடக்கு மாவட்ட அலுவலமான ராஜ்பவனில் வடக்கு மாவட்டத் தலைவா் உதயகுமரன் தலைமையிலான ஆய்வுக்குழு நோ்காணல் நடத்தியது.

இதில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் விருப்ப மனு அளித்த 21 போ், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 22 போ், பவானி சட்டப்ப பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 15 போ், பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 18 பேரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரைத் தோ்வு செய்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு பரிந்துரை செய்ய உள்ளனா்.

நோ்காணல் ஆய்வுக் குழுவில் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், மாநில செயலாளா் சிவகுமாா் மற்றும் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி, வட்டார, நகரத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.