தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

News image

சத்தியமங்கலம்  அரசு  ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு  செலுத்த   காத்திருந்த  பொதுமக்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:40 pm

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

பவானிசாகா் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளா்கள் காலை முதலே வாக்குச் சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளா்கள் வருகை அதிகரித்திருந்தது.

பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ. பண்ணாரி தனது வாக்கை பதிவு செய்தாா். பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் வாக்களித்தாா். வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளா்கள் கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.