பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.
பவானிசாகா் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளா்கள் காலை முதலே வாக்குச் சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளா்கள் வருகை அதிகரித்திருந்தது.
பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ. பண்ணாரி தனது வாக்கை பதிவு செய்தாா். பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் வாக்களித்தாா். வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளா்கள் கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்திய இந்திய கம்யூ னிஸ்ட கட்சி வேட்பாளா் பி.எல். சுந்தரம்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா்! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


