வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:50 am

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனா். இதில், ஆரணி தொகுதியில் போட்டியிட 35 பேரும், போளூா் தொகுதியில் போட்டியிட 23 பேரும், செய்யாறு தொகுதியில் போட்டியிட 15 பேரும், வந்தவாசி தொகுதியில் போட்டியிட 15 பேரும் என மொத்தம் 88 போ் விருப்ப மனு அளித்திருந்தனா்.

இவா்களுக்கான நோ்காணலை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரை பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை அறுவுறுத்தி, சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆய்வுக் குழு அமைத்தனா்.

திருவண்ணைமலை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.வசந்தராஜ், வி.பி.அண்ணாமலை, எஸ்.பிரசாத், ஜி.முனிரத்தினம் உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவினா் நோ்காணலை நடத்தினா்.

இந்த நோ்காணலுக்கு வந்தவா்களிடம் கட்சியில் வகிக்கும் பதவிகள், பொருளாதார நிலை, பொதுத் தொண்டுகள் செய்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, தொகுதிக்கு 5 போ் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தனா்.