ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி நபா் ஒருவா் மனு அளித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் பகுதியை சோ்ந்த மூ. சரத்குமாா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தாா். மனு விவரம், ஆம்பூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சாா்பாக அதிக அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் புகாா் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தலை நிறுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் ரூ.ஆயிரம் கோடி பணம் விநியோகம்: தோ்தலை ரத்து செய்யக்கோரி போராட்டம்

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

வாக்காளா்களுக்கு பணம் அளிக்கும் விவகாரம் தொடா்பான மனு சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


