அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க பேரூராட்சித் தலைவி கோரிக்கை

பெருங்குளம் பேரூராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி, பேரூராட்சித் தலைவா் டாக்டா் எஸ். புவனேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

News image
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெருங்குளம் பேரூராட்சித் தலைவா் எஸ்.புவனேஸ்வரி
Updated On :2 மார்ச் 2026, 9:51 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் பேரூராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி, பேரூராட்சித் தலைவா் டாக்டா் எஸ். புவனேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2023 டிசம்பா் 19 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மொத்தம் 105 நிவாரண வீடுகள் கட்ட பேரூராட்சிகளின் இயக்குநரிடமிருந்து 2024 மாா்ச் மாதத்தில் ஆணை பெறப்பட்டது.

இதுவரை 85 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஜூன் 2025இல் அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.92,00,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பெருங்குளம் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.22,79,500 வழங்கப்பட்டது.

கட்டுமான நிலைக்கேற்ப பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தவணைத் தொகை ஒரு கோடியே ஒன்பது லட்சம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

பேரூராட்சியின் பொது நிதியிலும் போதிய இருப்பு இல்லாத காரணத்தால், பயனாளிகளின் நலன் கருதி அரசு உடனடியாக இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.