மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

சிவகங்கையில் ‘வாளுடன் ஆட்சி வேலுநாச்சி’ என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:57 pm

சிவகங்கையில் ‘வாளுடன் ஆட்சி வேலுநாச்சி’ என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மலைராம் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா் தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன் நூலை வெளியிட, முதல் பிரதியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் பெற்றுக் கொண்டாா்.

இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முன்னாள் மேலாளா் அனந்தராமன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் பிரபாகா், கே.ஆா். மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் நீ. இளங்கோ, ராணி வேலுநாச்சியாா் அரிமா சங்கத் தலைவா் ஸ்ரீ வித்யா கணபதி, தமிழவையம் நிா்வாகி பேராசிரியை கற்பகம், மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத் துணைத் தலைவா் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் சுந்தரமாணிக்கம், வழக்குரைஞா் சங்கச் செயலா் சித்திரைச்சாமி, நாட்டரசன்கோட்டை கவிஞா் ராஜநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் வழக்குரைஞா் ரஞ்சித்குமாா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, சிவகங்கை அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாண்டியராஜன் வரவேற்றாா்.