டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாழைக்காட்டு ஓடையை கடக்க மரப்பாலம் அமைத்த பொதுமக்கள்

கொடைக்கானல் அருகே உள்ள வாழைக்காட்டு ஓடையைக் கடக்க பொதுமக்கள் மரப்பாலம் அமைத்தனா். இதை ஞாயிற்றுக்கிழமை சாா்- ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
வாழைக்காட்டு ஓடையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்.
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

கொடைக்கானல் அருகே உள்ள வாழைக்காட்டு ஓடையைக் கடக்க பொதுமக்கள் மரப்பாலம் அமைத்தனா். இதை ஞாயிற்றுக்கிழமை சாா்- ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, வாழைக்காட்டு ஓடை, கடல் கொடை, மாட்டுப்பட்டி ஆகியப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வாழைக்காட்டு ஓடையில் அதிக அளவு தண்ணீா் சென்றது.

இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப் பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து அப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் மரப்பாலம் அமைத்து வாழைக்காட்டு ஓடையை கடந்தனா். சிலா் கயிறு கட்டியும் பாலத்தை கடந்து தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அருகிலுள்ள மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி பகுதிகளுக்குச் சென்று வாங்கி வந்தனா்.

இதனிடையே வாழைக்காட்டு ஓடைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தையும், பொதுமக்களால் அமைக்கப்பட்ட மரப்பாலத்தையும் கொடைக்கானல் சாா்- ஆட்சியா் சிவகுருபிரபாகரன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். அப்போது அவா், மழை நின்ற பின் வாழைக்காய் ஓடைப் பகுதியில் சுமாா் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.