டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

News image
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திடீரென எழுந்த விவசாயிகள் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை. இதனால் எங்களது கோரிக்கைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. எனவே, இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் எனக்கூறி வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போராட்டத்தில் பங்கேற்ற தென்னிலை ஆடு வளா்ப்போா் சங்கத் தலைவரும், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான சி.நடராஜன் கூறுகையில், கடந்த இரு மாதங்களாகவே விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை. இப்போது புதிய மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்றுள்ளதால் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கும் வகையில் ஏராளமான விவசாயிகள் வந்திருந்தோம். ஆனால் ஆட்சியா் பங்கேற்காததால் எங்களது கோரிக்கை மனுக்களை வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

ஆனால் அதிகாரிகள் இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்லை.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்க இயலவில்லை என்ற அறிவிப்பை ஏற்கெனவே ஊடகங்கள் மூலம் அறிவித்திருக்க வேண்டும். திருப்பூா் ஆட்சியா் கூட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற இயலாததால் கூட்டத்தை தள்ளி வைத்து நடத்த உள்ளனா். அதேபோல் கரூா் மாவட்ட ஆட்சியரும் விவசாயிகள் கூட்டத்தை தள்ளி வைத்து மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்றாா் அவா்.