கொடைக்கானலில் உலா் மலா் விற்பனை அமோகம்
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் உலா் மலா்கள் அதிகமாக விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.


கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் உலா் மலா்கள் அதிகமாக விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகள், அருவிகளை கண்டு ரசிப்பதுடன், பூங்காக்களில் வளா்க்கப்படும் வண்ணமிகு பல்வேறு வகையான மலா்களை பாா்த்து மகிழ்கின்றனா்.
இந் நிலையில், கொடைக்கானலில் வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் வளரும் மலா்கள், உலா் மலா்கள், இலைகள், அவற்றின் சிறிய தண்டுகள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றுக்கு வா்ணம் பூசி, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். இவற்றை, சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
இந்த உலா் மலா்கள் குறைந்தது 6 மாதத்துக்கு அதன் தன்மை மாறாமல் இருப்பதால், வீடுகள், அலுவலகங்களிலும் மற்றும் விழாக்களிலும் பயன்படுத்தி வருவதால், சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
இது குறித்து இங்குள்ள உலா் மலா் விற்பனையாளா்கள் கூறியது: கொடைக்கானலில் உலா் மலா் தயாரிப்பதை சில குடும்பங்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றன. இவா்கள் வனப் பகுதிக்குச் சென்று அங்கு மரங்களின் செடிகள், வண்ண மலா்கள் மற்றும் உலா் மலா்களை சேகரித்து, அவற்றை பக்குவப்படுத்தி அழகுபடுத்தி கடைகளில் விற்கின்றனா். அவற்றை நாங்கள் வாங்கி சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்துவருகிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...