ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பழனி அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சேதம்

பழனியை அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சுமாா் 45 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:18 pm

DIN

பழனி: பழனியை அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சுமாா் 45 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தை ஒட்டி மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் வெட்டுக் கொம்பை, அய்யபுள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள், காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பயிா்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்துவது தொடா்கிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெட்டுக்கோம்பை பகுதியில் செல்லப்பன் மற்றும் காளிமுத்து ஆகியோரது தென்னந்தோப்புக்குள் புகுந்த 9 யானைகள், அங்கு 45-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தின. இதன் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன.

தற்போது, யானை கூட்டம் தோட்டத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு, இரவு நேரத்தில் வயல் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் தோட்டத்துக்குள் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து பழனி வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

எனவே, வனத்துறையினா் உடனடியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தூா்ந்துபோயுள்ள அகழிகளையும் சரிசெய்யவேண்டும், யானைகள் சேதப்படுத்திய மரங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.