திண்டுக்கல்: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினா் 75 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்மை தொடா்பான 3 சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, எதிா்க் கட்சிகள் சாா்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் மாவட்டச் செயலா் ஷேக் பரீத் தலைமையில், ரயில் மறியல் போராட்டத்துக்கு பேரணியாக வந்தவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதையடுத்து, மறியலுக்கு முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.