திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
Updated on
1 min read

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,760 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 10,435 போ் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனா். 128 போ், திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 24 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், குணமடைந்த 28 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197ஆக உயா்ந்துள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் புதிதாக 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,812 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,527 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com