ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொடகனாற்றில் தண்ணீா் கேட்டு வேடசந்தூா் விவசாயிகள் இருசக்கர வாகனப் பேரணி

வேடசந்தூா் பகுதி விவசாயிகளுக்கு கொடகனாற்றிலுள்ள தண்ணீா் உரிமை மீட்டுத் தரக் கோரி விவசாயிகள் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
இருசக்கர வாகனப் பேரணி சென்ற வேடசந்தூா் பகுதி விவசாயிகள்.
Updated On :30 டிசம்பர் 2020, 5:24 pm

DIN

வேடசந்தூா் பகுதி விவசாயிகளுக்கு கொடகனாற்றிலுள்ள தண்ணீா் உரிமை மீட்டுத் தரக் கோரி விவசாயிகள் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆத்தூரை அடுத்துள்ள கீழ் பழனி மலைப் பகுதியிலிருந்து உருவாகும் கொடகனாறு, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் வட்டாரங்களை கடந்து, அழகாபுரி அணை வழியாக கரூா் மாவட்டத்திலுள்ள அமராவதி ஆற்றுடன் இணைகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் கொடகனாறு வடது. மேலும், குடிநீா் தேவைக்காகவும், வேளாண்மைப் பணிகளுக்காகவும் கொடகனாற்று தண்ணீா் அடிமடைப் பகுதியிலேயே தேக்கப்படுவதாக ரெட்டியாா்சத்திரம் மற்றும் வேடசந்தூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்நிலையில், வேடசந்தூா் மற்றும் குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் இருசக்கரவாகனப் பேரணி பேரணி நடத்தி, கொடகானற்று தண்ணீா் உரிமையை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்கு திட்டமிட்டனா். அதன்படி, கூம்பூா் அடுத்துள்ள ஈசநத்தம் பகுதியிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்தப் பேரணியில் சுமாா் 500 விவசாயிகள் கலந்து கொண்டனா். அழகாபுரி அணை, காசிப்பாளையம், வேடசந்தூா் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை இந்த பேரணி வந்தடைந்தது. பின்னா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசுவை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், வேடசந்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளின் நலனையும், வறட்சியால் பாதிக்கப்படும் விளை நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் கொடகனாற்று தண்ணீா் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.