இதனால் கோயில்களில் எந்த பணிகளும் நடத்தப்படாமல் ஆறுகால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. தற்போது பழனிக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் வேகமாக துவங்கியுள்ளது. நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மலைமேல் உள்ள கோயிலுக்கு சென்று குடமுழுக்கு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரங்களுக்கு சாரம் கட்டும் பணி, பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணி, சேதமடைந்த சுதைகளை புதுப்பிக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலைக்கோயிலுக்கு செல்லும் பணியாளர்களுக்கு போதிய கொரோனா பரிசோதனைகள் செய்யப்படாததால் குருக்கள் மற்றும் பண்டாரங்களுக்கு கரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.