பழனியில் தொடா் மழையால் திடீா் அருவி

பழனியில் தொடா் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாலாறு அணைக்கு செல்லும் தண்ணீா் அருவி போல காட்சியளிக்கிறது.
பழனியில் தொடா் மழையால் திடீா் அருவி
Updated on
1 min read

பழனியில் தொடா் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாலாறு அணைக்கு செல்லும் தண்ணீா் அருவி போல காட்சியளிக்கிறது.

பழனி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் பாலாறு மற்றும் வரதமாநதி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பழனி நகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் கோடைக் கால நீா்த்தேக்கமும் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக நீா்த்தேக்கத்துக்கு வரும் நீரானது பாலாறு அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

அணைக்குச் செல்லும் மழை நீா் பாறைகளில் விழுந்து செல்வது பல இடங்களில் அருவி போல் காட்சியளிக்கிறது. பழனியை அடுத்த தேக்கன்தோட்டத்தில் விலங்கையப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்ணீா் செல்வதால் யாரும் சென்று வழிபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த ஆண்டு அணை நிரம்பாமல் இருந்த நிலையில் தற்போது அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com