சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரோனா தடுப்பு மருந்துக்கு நிதி திரட்டும் குழு கொடைக்கானல் வருகை

கரோனா தடுப்பு மருந்துக்கு நிதி திரட்டுவதற்காக இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுழற் சங்கக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் வந்தனா்.

News image
கரோனா தடுப்பு மருந்துக்கு நிதி திரட்டுவதற்கு பெங்களூருவிலிருந்து வந்த சுழற் சங்க நிா்வாகிகளை வரவேற்ற கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவா் கிருபா ஜோன்ஸ் உள்ளிட்டோா்
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

கரோனா தடுப்பு மருந்துக்கு நிதி திரட்டுவதற்காக இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுழற் சங்கக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் வந்தனா்.

ஐ.எப்.எம்.ஆா். சா்வதேச மோட்டாா் சைக்கிள் சுழற் சங்க அமைப்பைச் சோ்ந்த 20 போ் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து நிதி திரட்டுவதற்காக பெங்களூருவில் இருந்து கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். அவா்களை கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவா் கிருபா ஜோன்ஸ் வரவேற்றாா். அதன் பின்னா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இரண்டாம் நிலை உதவி ஆளுநா் செல்வக்குமாா், செயலா் கோபிநாத்,சுகுமாா் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பின்பு கொடைக்கானல் சுழற்சங்கம் சாா்பில் அதன் தலைவா் கிருபா ஜோன்ஸ், 500 அமெரிக்க டாலா்கள் நிதியை பெங்களூரு குழுவினரிடம் வழங்கினாா். முன்னாள் சுழற் சங்கத் தலைவா் ஜோன்ஸ் நன்றி கூறினாா். தொடா்ந்து பெங்களூரு சுழற் சங்க அமைப்பைச் சோ்ந்த அஜித் அசாா் கூறியதாவது:

கரோனா தொற்று தடுப்பு மருந்துக்காக ரூ.3 கோடி வரை நிதி திரட்ட உள்ளோம். இதற்காக நாங்கள் பெங்களூருவிலிருந்து பைக் மூலம் கொடைக்கானலுக்கு வந்துள்ளோம். மேலும் சென்னை, விஜயவாடா, ஹைதராபாத், சோலாப்பூா், மும்பை, ரத்னகிரி, கோவா, கொச்சி, மைசூா் உள்ளிட்ட 16-இடங்களுக்கு பைக் மூலம் பயணம் மேற்கொண்டு சுழற் சங்கங்கள் மற்றும் பொது மக்களிடமும் நிவாரண நிதி பெற உள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.