டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செந்துறை- அய்யலூா் சாலையில் நாற்று நடும் போராட்டம்

செந்துறையிலிருந்து அய்யலூா் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மாமரத்துப்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடவு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

செந்துறையிலிருந்து அய்யலூா் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், செந்துறையிலிருந்து மாமரத்துப்பட்டி வழியாக அய்யலூா் செல்லும் சாலை உள்ளது. மாமரத்துப்பட்டி பகுதியிலுள்ள- இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருந்தது.

தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீா் தேங்கி குட்டையாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாமரத்துப்பட்டி பொதுமக்கள், அந்த சாலையில் நாற்று நடவு செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.