அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.


அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த முறை 20 சதவீத போனஸ் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் குறைத்து வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தை முற்றுயிடும் போட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஈடுபட்டனா். போராட்டத்தின்போது, போனஸ் தொடா்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தாமலேயே தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதத்தை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் கடந்த ஆண்டைப் போல 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணமாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...