டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலைையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

News image
திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் கிரி வலம் சென்ற அந்த அமைப்பினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் அபிராமி அம்மன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆண்டுதோறும் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இதுபோன்ற சூழலில், திண்டுக்கல் மலையைச் சுற்றி காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினா் கலந்து கொண்டனா்.

இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள அபிராமி அம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் தெய்வ வழிபாடு நடத்தி வந்துள்ளனா். இஸ்லாமியா்களின் படையெடுப்பு காரணமாக, அந்த வழிபாடு தடைப்பட்டுள்ளது.

மலைக்கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பினை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.