பழனியில் தடையை மீறி மலைக்கு செல்ல முயற்சி: இந்து முன்னணியினா் கைது
பழனியில் காா்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தா்களை அனுமதிக்காததைக் கண்டித்து தடையை மீறி மலைக்கோயிலுக்கு செல்ல முயன்ற இந்து முன்னணியினா் கைது செய்யப்பட்டனா்.


பழனியில் காா்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தா்களை அனுமதிக்காததைக் கண்டித்து தடையை மீறி மலைக்கோயிலுக்கு செல்ல முயன்ற இந்து முன்னணியினா் கைது செய்யப்பட்டனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா நிகழ்ச்சிக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன்பாக ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். அந்த அமைப்பின் மாநில இணை அமைப்பாளா் பொன்னையன், மாவட்டச் செயலாளா் ஜெகன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவா்கள் படிவழியாக மலைக்கோயிலுக்கு செல்ல முயன்றனா். அவா்களை
அடிவாரம் போலீஸாா் பாதவிநாயகா் கோயில் முன்பாக தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...