டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக பிரமுகா் கொலை: மேலும் 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் திமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN

திண்டுக்கல்லில் திமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சின்னப்பரன் திவ்யராஜ் என்ற அருண் கடந்த அக்டோபா் 22 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த தாமஸ் என்பவரது மகன்கள் ஜாா்ஜ் (32) மற்றும் பிரான்சிஸ் (36), சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மகன் சபரி என்ற சபரி காந்தன் (32), திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் செல்வக்குமாா் (23) உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதில் ஜாா்ஜ், பிரான்சிஸ், சபரி காந்தன் மற்றும் செல்வக்குமாா் ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள ஏரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கருப்புச்சாமி (24), மொட்டணம்பட்டியைச் சோ்ந்த இருளப்பன் மகன் விக்னு என்ற விக்னேஷ் (26), மேட்டுப்பட்டி அந்தோணிசாமி மகன் ஸ்டாலின் என்ற ஸ்டாலின் ஜோசப் (35), சின்னாளப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலச்சந்தா் (22) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரைத்துள்ளாா்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.