காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை. மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பெரும்பாலான வட்டாரங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே விவசாயிகள் கலந்து கொண்டனா். திண்டுக்கல், சாணாா்பட்டி, ரெட்டியாா்சத்திரம், ஆத்தூா், நத்தம் வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. இதனால் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.