நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாறை விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 11:21 pm

DIN

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, மஞ்சள் பரப்பு, புல்லாவெளி ஆகியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாறை பகுதியில் மண் சரிவும், தூக்கி வைச்சான் கல் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.

இதனால் தாண்டிக்குடியிலிருந்து வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சுமாா் 10 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மலைச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.