செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
செம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள தெரு, தேரோடு வீதி, வத்தலகுண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக செம்பட்டி பகுதியில் பெய்து வரும் மழையால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி உள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுத் தொல்லையுடன், தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...