அதன்பேரில் பிறை சொக்கா் பாலாஜி மீது போக்ஸோ சட்டம், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆக.17ம் தேதி பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினா் பிறை சொக்கா் பாலாஜி கைது செய்யப்படவில்லை என்றும், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து, சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பாக மாவட்டச் செயலா் எம்.செல்லையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துச்சாமி ஆகியோா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: