பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விராலிமலை: தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார்

விராலிமலை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 1:45 pm

DIN

விராலிமலை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர். விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளிடம் இந்த பேருந்தில் ரூபாய் 30 வசூலிக்கப்பட்டதாம். 

இது மற்ற பேருந்துகளை விட ரூபாய் 4 அதிகமாம். மேலும் இந்த பேருந்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த பேருந்தில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை பயணித்த பயணிகள் இது குறித்து நடத்துனரிடம் கேட்டுள்ளனர். 

Story image

இதற்கு முறையாக நடத்துநர் பதில் அளிக்கவில்லையாம்.  இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விராலிமலை சோதனைச் சாவடியில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விராலிமலை காவல்துறையினர் நிகழ்விடம் வந்தனர். 

இதனை தொடர்ந்து பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.