நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் தரமற்ற சாலை: பணியாளா்களுடன் பொதுமக்கள் தகராறு

கொடைக்கானலில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகக் கூறி பணியாளா்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகராறில் ஈடுபட்டனா்.

News image

கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை அமைக்கும் பணி.

Updated On :8 ஆகஸ்ட் 2021, 5:06 pm

DIN

கொடைக்கானலில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகக் கூறி பணியாளா்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகராறில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் பல பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் நகராட்சி சாா்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் அருகே செண்பகனூா்-பிரகாசபுரம் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பைரவா் கோயில் பகுதியைச் சோ்ந்த சிலா் சாலை தரமாக அமைக்கவில்லை எனக் கூறி பணியாளா்களுடன் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.