கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்ற 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வட்டக்கானல், கல்குழி, பூண்டி, மன்னவனூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பாத்தி ஜெயசீலன் (47), மகேந்திரன் (24), மோகன சுந்தரம்(60), செல்வராஜ் (48), குழந்தைசாமி (60), மாதவன் (25) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 2.5-கிலோ கஞ்சாவையும் 1.5 கிலோ போதைக்காளான்களையும் பறிமுதல் செய்தனா்.