பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட6 போ் கைது

பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 2 காா்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Updated on
1 min read

பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 2 காா்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (55). தேங்காய் வியாபாரியான இவரை, கடந்த ஆண்டு நவம்பரில் மா்மநபா்கள் கடத்திச்சென்று ரூ.10 லட்சம் பிணையமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்தனா்.

இது குறித்து மயில்சாமிஅளித்த புகாரின்பேரில், பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக, போலீஸாா் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க கோபிநாத், கோபாலக்கண்ணன், பாரத், விகாஷ், வா்ஷன் மற்றும் ராஜேஷ் ஆகிய 6 இளைஞா்களை கைது செய்தனா்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 காா்கள், 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இது தவிர, ஆள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட ரெளடி பூபாலன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com