ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள திருமலைராயபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (65). இவா் ஒட்டன்சத்திரம்- செம்பட்டி சாலை திருமலைராயபுரம் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.